நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு புதிய விவசாயிகள் சட்டத்தை நேற்று அமல்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையிலும் இந்தச் சட்டம் நிறைவேறியது. நாடு முழுவதும் இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் போராடி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், புதுச்சேரியில் தலைமை தபால் நிலையம் முன்பு இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமை வகிக்க, போராட்டக்காரர்கள் நாற்றாங்காலை கையில் வைத்துக்கொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், சிறு விவசாயிகளை அழிக்கும் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர், அவர்கள் நாற்றாங்காலை வீதியில் நட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers Protest, Puducherry