கர்நாடகாவில் மாணவர்களின் சீருடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரியில் மாணவர்களின் சீருடை குறித்து பள்ளி கல்வித்துறை முடிவு செய்யும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அரியாங்குப்பம் மாதா கோயில் எதிரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவி வழக்கமாக பள்ளி வரை பர்தா அணிந்து கொண்டு வருவார். பின்னர் வகுப்பறைக்கு செல்லும் போது அதனை கழட்டி பையில் வைத்துக் கொள்ளுவார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கத்துக்கு மாறாக பர்தாவுடன் வகுப்பறையில் அமர்ந்து உள்ளார். இதை கண்ட பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு இது சம்பந்தமாக பேசி உள்ளனர்.
மேலும், பள்ளிக்கு இனி மாணவி பர்தா அணிந்துதான் வருவார் என்று மாணவிக்கு ஆதரவாக சிலர் பள்ளியில் வந்து பேசி உள்ளனர்.இந்த நிலையில் இன்று மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளிக்கு வந்து முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் காவல்துறையினர், பள்ளிக்கல்வி முதன்மை அதிகாரி மீனாட்சி சுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்த நிலையில் சுல்தான்பேட்டை பள்ளியில் உள்ள மாணவிகள் தலைக்கு மட்டும் பர்தா அணிந்து வருவார்கள், அது போல வருவதற்கு அரசு பள்ளி நிர்வாகம் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, மாணவர் கூட்டமைப்பு அமைப்பினர் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரை சந்தித்து மனு அளித்தனர். இதனையடுத்து இஸ்வாமிய மாணவி ஹிஜாப் விவகாரத்தில் முதலமைச்சரை சந்தித்து அனைத்து மாணவர் அமைப்பு மற்றும் சமூக ஜனநாயக இயக்கங்கள் மனு அளித்தன.
இதையும் படிங்க: ஹிஜாப் விவகாரத்தில் இந்திய தலைவர்களுக்கு மலாலா கண்டனம்
அனைத்து மாணவர் அமைப்பு மற்றும் சமூக ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டியக்கம் சார்பில்
முதல் அமைச்சர் ரங்கசாமியை அதன் பொறுப்பாளர்கள் இன்று மதியம் சந்தித்து மனு அளித்தனர்.அப்போது,புதுச்சேரியில் சிறுபான்மையின மக்களை குறி வைத்து, மதசார்பின்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் நடந்த நடவடிக்கைகள் சார்ந்து விசாரணையும் நடவடிக்கையும் எடுக்க கோரினார்கள்.
மேலும் படிக்க: மேட் இன் சீனாதான் புதிய இந்தியாவா? ராகுல் காந்தி விமர்சனம்
இதனிடையே அரசு நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்ற வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ஹிஜாப் அணிந்த மாணவி விவகாரம் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,மாணவர்களின் சீருடை குறித்து பள்ளி கல்வித்துறை முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
இது குறித்து கல்வி துறை இயக்குனர் ருத்ர கவுடு கூறுகையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்லாமிய மாணவியருக்கு உடையில் புதிய கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை என கூறினார்.
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.