காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவின் மிரட்டலால்தான் அக்கட்சிக்குச் செல்கின்றனர் என்றும், சிலர் நிர்பந்தம் காரணமாக என்.ஆர்.காங்கிரஸ்க்குச் செல்கிறார்கள் எனவும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியனும், திமுக சார்பில் மாநில அமைப்பாளர்கள் சிவா மற்றும் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி காங்கிரஸ்-திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரி திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. திமுக கேட்ட தொகுதிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டது என்றர்.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை சென்னை வருகின்றார். அங்கு இந்த எண்ணிக்கை குறித்து திமுக தலைவரிடம் தெரிவிப்போம். தொகுதி பங்கீடு குறித்த இறுதி முடிவு நாளை அல்லது நாளை மறுநாள் தெரியவரும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.
Must Read : அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு - தகவல்
பாஜகவின் மிரட்டலால்தான் காங்கிரஸ் நிர்வாகிகள் அக்கட்சிக்குச் செல்கின்றனர். ஒரு சிலர் நிர்பந்தம் காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் செல்கிறார்கள் என்றும் நாராயணசாமி அப்போது கூறினார்.
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.