காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவமணியை திருநள்ளாற்றில் மர்மநபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட செயலாளராக தேவமணி என்பவர் இருந்து வருகிறார். இவர் காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திருநள்ளாறு கடைவீதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும்போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து திருநள்ளாறு மற்றும் காரைக்கால் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகிறார்கள். பாமகவின் முக்கிய பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.