புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்து கவிழ்ந்த நிலையில், அங்கே குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
புதுச்சேரியில், நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தனர். இதனால், காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பெரும்பான்மையை இழந்தது. நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில், நாராயணசாமியின் ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார். அதனை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரிக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கே குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.