புதுச்சேரியில் இரண்டு பேருந்துகளுக்கு இடையில் கைக்குழந்தையுடன் பைக்கில் சிக்கிய தம்பதி, நூலிழையில் உயிர் தப்பினர்.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிரே புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஒரு அரசு பேருந்தும் வேகமாக வந்தது. இந்த இரண்டு பேருந்துகளுக்கு இடையில் கைக்குழந்தையுடன் பைக்கில் வந்த தம்பதி சிக்கிக் கொண்டனர். கல்மண்டபம் கிராம சந்திப்பில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால், செய்வதறியாது திகைத்த தம்பதி வாகனத்தில் இருந்து குதித்து அலறியடித்து ஓடினர்.
இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் சேதமடைந்த நிலையில், கைக்குழந்தையுடன் கணவனும், மனைவியும் நூலிழையில் உயிர் தப்பினர். பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதைபதைக்க வைக்கும் விபத்துக் காட்சிகள் பதிவாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.