புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் 2528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில், புதுச்சேரியில் 1985 நபர்களுக்கும், காரைக்காலில் 411 பேர், ஏனாமில் 105 பேரும், மாஹேவில் 27 பேர் என மொத்தம் 2528 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் தற்போது 14,122 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,898 ஆக உள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை 1,31,850 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,47,870 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Also Read : கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ புகைப்பட கண்காட்சி
கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,15,185 பேரும், இரண்டாம் தவணை 5,96,219 பேரும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 4,414 பேர் செலுத்திக் கொண்டனர். மொத்தமாக 15,15,818 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.