முகப்பு /செய்தி /இந்தியா / புதுச்சேரியில் திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார்.

புதுச்சேரியில் திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார்.

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

  • Last Updated :

பெண்கள் குறித்து திருமாவளவன் இழிவாக பேசி உள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜக வழக்கறிஞர்கள் சார்பில் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

பெரியாரும் இந்திய அரசியலும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட காணொளி நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனுஸ்மிருதி பெண்களை இழிபடுத்துவதாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டிக்கும் வகையிலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருமாவளவனை தூற்றும் வகையிலான போஸ்டரை கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும், திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்த பாஜகவினர், அனைத்து கழிப்பிடச் சுவர்களிலும் திருமாவளவனை கண்டித்து போஸ்டர் ஒட்டி கண்டனம் தெரிவிப்போன் என்று கூறினர்.

top videos
    First published:

    Tags: BJP, Thol. Thirumavalavan