முகப்பு /செய்தி /இந்தியா / இலவச அறிவிப்புகளுக்கான நிதி ஆதாரத்தை விளக்குக? - அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் போடும் தேர்தல் ஆணையம்

இலவச அறிவிப்புகளுக்கான நிதி ஆதாரத்தை விளக்குக? - அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் போடும் தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிகள் அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை பாதுகாக்க வழி வகுக்கும் அதே வேளையில், வேட்பாளர் எவ்வளவு பணத்தை எப்படி செலவழிக்கிறார் என்பதையும் விளக்க கட்டயாப்படுத்துகிறது.

  • Last Updated :
  • New Delhi, India

தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச பொருட்களுக்கு  நிதி ஆதாரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் அண்மை காலமாக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச பொருள்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  ஒரு சில கட்சிகள் இலவசங்களுக்கு ஆதரவாகவும் சில கட்சிகள் எதிர்ப்பாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இலவச திட்டங்களை முற்றிலுமாக  ஒழிக்க வேண்டும் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இலவச திட்டங்களை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் இலவச பொருட்களுக்கான நிதி ஆதாரங்கள் குறித்து விளக்க உத்தரவிட்டுள்ளது.தேர்தல் அறிக்கைகளில்  உறுதியளிக்கப்படும்  திட்டங்களுக்கு கட்சிகளை பொறுப்பேற்க வைப்பது குறித்து புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் கடிதத்திற்கு வரும் 19- ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சிகளால் நிறைவேற்ற சாத்தியமுள்ள திட்டங்கள் மூலமே, வாக்காளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்  என்றும் வெற்று வாக்குறுதிகள் எதிர்மறை  விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் தேர்தல் ஆணையம் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கைகளை தயாரிப்பது, அரசியல் கட்சிகளின் உரிமை என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், இலவச அறிவிப்புகளால் ஏற்படும் தாக்கங்களை கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறியுள்ள ஆணையம் சுதந்திரமான தேர்தலை நடத்துவதில் இலவச திட்டங்களை அறிவிக்காத கட்சிகளுக்கு சமவாய்ப்புகள்  இல்லாமல் போய் விடுவதாக  குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை பாதுகாக்க வழி வகுக்கும் அதே வேளையில், வேட்பாளர் எவ்வளவு பணத்தை எப்படி செலவழிக்கிறார் என்பதையும் விளக்க கட்டயாப்படுத்துகிறது. ஆனால் வேட்பாளர்கள் அளிக்கும் தரவுகள் போதுமானவை அல்ல என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Read More: உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு - மாயமான 23 பேரை தேடும் பணி தீவிரம்

அரசியல் கட்சிகள்  அளிக்கும் வாக்குறுதிகளால் பயன்பெறும் மக்களின் விவரங்கள், இலவசங்களால் நிதிச்சுமையில் ஏற்படும் தாக்கங்கள், நிதி வசூல் செய்யப்படும் வழிமுறைகள், மத்திய மற்றும்  மாநில அரசுகளின் நிதி நிலைத்தன்மை  மீது ஏற்படும் தாக்கங்கள் என்ன என்பதை விளக்க  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

top videos

    தங்கள் கேள்விகளுக்கு  கட்சிகள் பதில் அளிக்கவில்லை என்றால், அவற்றிக்கு குறிப்பிட்டு கூற எதுவும் இல்லை என  அனுமானித்துக்கொள்ளப்படும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Election, Election Commission