சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன் நாடு தற்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் நேட்டோ அமைப்புடன் இணைவதற்கான வேலைகளை செய்து வருகிறது. உக்ரைனின் இந்த நடவடிக்கை அண்டை நாடான ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதி, உக்ரைனை ரஷ்யா எச்சரித்து வந்தது. மேலும், உக்ரைனைச் சுற்றி லட்சக்கணக்கான வீரர்களுடன் கூடிய ராணுவத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னரே நிறுத்திவைத்தது ரஷ்யா. இது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக ரஷ்யாவுடன் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. உக்ரைன் மீது போர் தொடுத்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கைவிடுத்தன.
இருப்பினும் இன்று அதிகாலையில் திடீரென ரஷ்யா போரைத் தொடர்ந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனும் உலக நாடுகளில் உதவியைக் கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தியிருந்தார்.
ரஷ்யா எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கும் உக்ரைன் அதிபர் வோலோடைமிர் செலன்ஸ்கி
இந்தநிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ‘உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண்பதற்கு அனைத்து தரப்பினரும் கூடிய ஒருங்கிணைந்த நடவடிக்கை வேண்டும்’என்று வலியுறுத்தினார். மேலும், உக்ரைனிலிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விளாதிமிர் புதினிடம் எடுத்துரைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.