பஞ்சாப் மாநிலத்தில் செல்போன் கடையில் துப்பாக்கியை டெமோ காட்டிய போலீஸ்காரரின் துப்பாக்கியில் இருந்து தவறுதலாக பாய்ந்த குண்டால் கடை ஊழியர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பஞ்சாப் காவல்துறை அதிகாரி ஒருவர் செல்போன் கடையில் அவரின் துப்பாக்கியை அங்கு உள்ள ஊழியர்களுக்கு முன்னிலையில் காட்டு விவரித்துள்ளார். அப்போது தூப்பாக்கியை திருப்பி பிடிக்கும் போது தவறுதலாக குண்டு எதிரில் உள்ள ஊழியர் போல் பாய்ந்துள்ளது.
அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பஞ்சாப் காவலர் துப்பாக்கியை உறையில் இருந்து எடுத்து ஊழியர்கள் மத்தியில் விவரிப்பது தெரிகிறது. மேலும் துப்பாக்கி குண்டு எதிரில் பாய்ந்ததும் தெரிகிறது.
#WATCH | A youth working in a mobile shop got injured in an alleged accidental firing by a policeman in Punjab's Amritsar
The accused police official has been suspended. We've recovered the CCTV footage: Varinder Singh, ACP North, Amritsar
(CCTV visuals) pic.twitter.com/N8R0VpMhH0
— ANI (@ANI) October 19, 2022
இந்த சம்பவத்தையடுத்து, அந்த காவலரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டு பாய்ந்து பாதிக்கப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : தீ விபத்தில் தரைமட்டமாக மசூதி கோபுரம்- வீடியோ காட்சி
இது குறித்து காவல் உதவி ஆணையர் வரீந்தர் சிங் தெரிவிக்கையில், சம்பவ இடத்தில் உள்ள ஊழியர்களின் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளது. அதன் அடிபடையில் தூப்பாக்கியை விதிகள் மீறி உபயோகித்த காவல் அதிகாரி மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.