மேற்கு வங்கத்தில் வந்தே பாரத ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கற்களை வீசும் காட்சி சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதால், அவர்களை தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில், ஹவுரா முதல் புதிய ஜல்பைகுரி பகுதி வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை கடந்த 30ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ரயில் மீது கடந்த 2 நாட்களில் 2 முறை கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ரயில் கண்ணாடிகள் சேதமடைந்தன.
Cc TV footage from the train.... 4 people find#VandeBharatExpress #VandeBharat #Bengals pic.twitter.com/uuiPP8Jmkl
— Ritwik Ghosh (@gritwik98) January 5, 2023
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் இளைஞர்கள் 4 பேர் ரயில் மீது கற்களை வீசும் காட்சி பதிவாகியுள்ளது. இதைக்கொண்டு போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vande Bharat