முகப்பு /செய்தி /இந்தியா / கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்ட பயன்களை நாளை வழங்கும் பிரதமர் மோடி

கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்ட பயன்களை நாளை வழங்கும் பிரதமர் மோடி

காட்சி படம்

காட்சி படம்

குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் இதுவரை 9,042 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 4345 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.

  • Last Updated :

குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை நாளை, மே 30-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்.

இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மார்ச் 11, 2020 முதல் பிப்ரவரி 28, 2022 வரை கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் இருவரையோ, அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரையோ, அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ, அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்டம் மே 29, 2021 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி மற்றும் உதவித்தொகை மூலம் அவர்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களுக்கு தன்னிறைவு அளிப்பதற்காக 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

நாளை நிகழ்ச்சியில், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளிப்பார். இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் கணக்கியல் புத்தகம் (passbook of PM CARES for Children) மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை (Ayushman Bharat -  health card) குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தினால் பயனடையும் குழந்தைகள், தங்களது பாதுகாவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளுடன் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் . அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

குழந்தைகளை பதிவு செய்வதற்காக http://pmcaresforchildren.in/ என்ற தளம் தொடங்கப்பட்டது. ஒப்புதல் நடைமுறைகளுடன் குழந்தைகளுக்கான அனைத்து உதவிகளை வழங்கும் ஒற்றை சாளர அமைப்புமுறையாக இந்தத் தளம் செயல்படுகிறது’ என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

4345 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன:

குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் இதுவரை 9,042 விண்ணப்பபங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 4345 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில் 790 பேரும், உத்தர பிரதேசத்தில் 441 பேரும், மத்திய பிரதேசத்தில் 438 பேரும், தமிழ்நாட்டில் 394 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

8 ஆண்டு ஆட்சியில் ஒருமுறை கூட தலைகுனிவு ஏற்படும் விதத்தில் செயல்பட்டதில்லை - பிரமதர் மோடி பேச்சு

top videos

    பெற்றோர்கள் இருவரும் (II) வாழும் ஒரு பெற்றோர் அல்லது (III) சட்டப்படியான காப்பாளர் / தத்தெடுத்த பெற்றோர்கள் / தத்தெடுத்த பெற்றோர்களில் ஒருவர், கொவிட் -19 என்பதைப் பெருந்தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவித்த 11.03.2020லிருந்து 31.12.2021க்குள் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக உயிரிழந்திருந்தால் இந்தத் திட்டத்தில் பயனாளியாக இணையமுடியும் (IV) பெற்றோர்கள் இறந்த தேதியில் சம்பந்தபட்ட குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: PM Cares