காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் மக்களின் மொபைல் பில் மாதம் ரூ. 4,000 முதல் 5,000 வரை இருந்திருக்கும் என குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டபேரவை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தின் பழங்குடிப் பகுதியான நேத்ராங் மற்றும் கெடா ஆகிய இடங்களில் பிரதமர் உரையாற்றினார். இதில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பயங்கரவாதம் முதல் உணவு தானியம் இலவசம் வரை பல்வேறு தலைப்புகளில் பேசினார்.
நாட்டில் பழங்குடியினர் மீது காங்கிரஸுக்கு மரியாதை இல்லை என்றும் எங்கள் பழங்குடியின மகளை திரௌபதி முர்முவை நாட்டின் ஜனாதிபதியாக்க முடிவு செய்தோம். அவரது வேட்புமனுவை ஆதரிப்பதற்காக நாங்கள் கூப்பிய கைகளுடன் காங்கிரஸ் கட்சியிடம் சென்றோம். ஆனால் அவர்கள் அதனை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தியதாகவும், நாட்டின் பழங்குடித் தலைவர்களுக்கு காங்கிரஸ் மரியாதை கொடுக்கவில்லை," என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
குஜராத்தில் பயங்கரவாதிகளை பிடித்தோம். ஆனால் டெல்லியில் இருந்த காங்கிரஸ் அரசு ஓட்டு வங்கி அரசியலுக்காக பயங்கரவாதிகளை காப்பாற்றி வந்தது. பாட்லா ஹவுஸ் என்கவுன்டரின் போது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் அழுதனர். தீவிரவாதம் கூட காங்கிரஸின் வாக்கு வங்கி என பிரதமர் மோடி கடுமையாக காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.