இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கடன் வாங்கி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற அவரை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகினற்ன.
இந்நிலையில், கடன் மோசடி தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி தலைமையிலான கடன் வாங்கிய 17 வங்கிகள் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன.
அதனைத் தொடர்ந்து, விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க துறை முடக்கியது. அதில் குறிப்பிட்ட சில சொத்துக்களை வங்கிகள் குழுமத்திற்கு வழங்க மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Must Read : 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு... மத்திய அரசு கொள்கைகளை மாற்றி அமைக்க ப.சிதம்பரம் கோரிக்கை
கடந்த வாரத்தில் இதேபோன்று வேறு சில சொத்துக்களை வங்கிகள் குழுமத்துக்கு வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த உத்தரவை எதிர்த்து மல்லையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.