கடந்த 2015ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் (panama papers) வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) ஆவணங்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists (ICIJ)) மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த 11.9 மில்லியன் ஆவணங்களை 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்த பட்டியலில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான மூன்று மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தை கலைக்கும்படி சச்சின் கேட்டுக்கொண்டதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த நிதிமுறைகேடு முதலீடு அறிக்கையை தயாரித்த அமைப்பு சச்சின் டெண்டுல்கர் வழக்கறிஞரிடம் கேட்ட போது, “டெண்டுல்கரின் வழக்கறிஞர் இது தொடர்பாக எங்களிடம் கூறும்போது, சச்சின் முதலீடு சட்டப்பூர்வமானது இது வரி அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியதாகக் கூறியுள்ளனர்.
இந்த அன்னிய முறைகேடு நிதி முதலீட்டில் அரசியல் வாதிகளின் கை குறித்த உலகவரைபடத்தில் இந்தியா தரப்பில் 6 என்றும் பாகிஸ்தான் தரப்பில் 7 என்றும் காட்டப்பட்டுள்ளது. பணக்கார நாடுகள் ஏற்படுத்தியுள்ள நிதி ரகசிய செயல்முறை அல்லது அமைப்பு சட்டம் எப்படி இவர்களுக்கு சாதகமாக வளைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய மிகப்பெரிய வெளிச்சத்தைக் காட்டியுள்ளதாக இந்த பாண்டோரா ஆவண விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது.
2016 ஆம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஊடகத்தில் வெளியானது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டது. இதில், திரைப்பட நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், டிஎல்ஃப் நிறுவனத்தின் தலைவர் கேபி சிங் மற்றும் அவருடைய ஒன்பது குடும்ப உறுப்பினர்கள், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரகசிய ஆவணங்கள் அடையாளப்படுத்திய 956 அயல்நாட்டு நிறுவனங்களில் 336 உயர்மட்ட அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பல பெரிய தலைகள் சிக்கியுள்ளன.
இதையும் படிங்க: Pandora Papers: முறைகேடான நிதி முதலீடு- வெளியான பண்டோரா ஆவணம்: சச்சின் உள்ளிட்ட இந்தியர்களும் சிக்கினர்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.