இந்திய விமானியை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல்!
பத்கம் பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

பத்கம் பகுதியில் விழுந்த இந்திய விமானம்
- News18
- Last Updated: February 27, 2019, 4:31 PM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை விமானத்தை தாக்கியதில் 1 விமானம் ஆஸாத் காஷ்மீரிலும், மற்றொரு விமானம் காஷ்மீரிலும் விழுந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நேற்று அதிகாலை ஊடுருவிய இந்திய விமானப்படை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பயங்கவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை பத்கம் பகுதியில் இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது. இரு விமானிகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ரஜோரி பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விமானம் லாம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி பாராசூட் மூலம் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒரு விமானம் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் விழுந்துள்ளதாகவும், மற்றொரு விமானம் இந்திய காஷ்மீரில் விழுந்துள்ளதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
அதாவது, பத்கம் பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஆஸாத் காஷ்மீரில் விழுந்த இந்திய விமானத்தின் விமானியை கைது செய்துள்ளதாகவும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
Live Updates: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நேற்று அதிகாலை ஊடுருவிய இந்திய விமானப்படை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பயங்கவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை பத்கம் பகுதியில் இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது. இரு விமானிகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒரு விமானம் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் விழுந்துள்ளதாகவும், மற்றொரு விமானம் இந்திய காஷ்மீரில் விழுந்துள்ளதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
In response to PAF strikes this morning as released by MoFA, IAF crossed LOC. PAF shot down two Indian aircrafts inside Pakistani airspace. One of the aircraft fell inside AJ&K while other fell inside IOK. One Indian pilot arrested by troops on ground while two in the area.
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) February 27, 2019
அதாவது, பத்கம் பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஆஸாத் காஷ்மீரில் விழுந்த இந்திய விமானத்தின் விமானியை கைது செய்துள்ளதாகவும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
Live Updates: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க