மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துவருகிறது. அந்த மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. திரிணாமுல் காங்கிரஸுக்கு போட்டியாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தை பா.ஜ.க பிடித்துள்ளது. பா.ஜ.கவுக்கு திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவிவருகிறது. மம்தா பானர்ஜி, மோடி, அமித்ஷா ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏராளமான எம்.பி, எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவுக்கு தாவி வருகின்றனர்.
தேர்தல் வரவுள்ளநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பா.ஜ.கவுக்கு செல்வது மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாநில போக்குவரத்து அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்தார்.
கடந்த டிசம்பர் 24-ம் தேதி அமித்ஷா கொல்கத்தா சென்றிருந்தபோது திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏக்களும், 1 எம்.பியும் பா.ஜ.கவில் இணைந்தனர். மேலும், சில எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்தநிலையில், அதன் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்தது. இந்தநிலையில், நேற்று வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி அவரது அமைச்சர் பதவியை ராஜீனாமா செய்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்