முகப்பு /செய்தி /இந்தியா / நர்சிங் மாணவிக்கு வலுக்கட்டாயமாக மது.. கூட்டு பாலியல் வன்கொடுமை.. போதையில் சீரழித்த இளைஞர்கள் கைது..!

நர்சிங் மாணவிக்கு வலுக்கட்டாயமாக மது.. கூட்டு பாலியல் வன்கொடுமை.. போதையில் சீரழித்த இளைஞர்கள் கைது..!

கூட்டு பலாத்காரம்

கூட்டு பலாத்காரம்

வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் வந்து விடலாம் என்று எண்ணத்தில் மாணவியும் அதற்கு சம்மதித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kozhikode, India

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், கோழிக்கோடு பகுதியில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். படிக்கும்போது கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இளைஞரின் நண்பரும் மாணவியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 18ம் தேதி அந்த மாணவியை தனது வீட்டுக்கு வருமாறு இளைஞர் அழைத்தார். வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் வந்து விடலாம் என்று எண்ணத்தில் மாணவியும் அதற்கு சம்மதித்துள்ளார். அதன்படி அன்று மாலை மாணவி இளைஞர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இளைஞர் வீட்டில் அவரது நண்பரும் இருந்துள்ளார். மூவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அதன்பிறகு மது அருந்தத் தொடங்கியுள்ளனர். முதலில் மது குடிக்க மறுத்த மாணவி, பின்னர் நண்பர்கள் வற்புறுத்தலால் சிறிது மது குடித்துள்ளார். மதுவின் மயக்கம் அதிகமாக மாணவி மயங்கி விழுந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்துள்ளனர்.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியை மறுநாள் காலையில் எர்ணாகுளம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு இளைஞர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி மாணவி, தனது தோழி ஒருவரிடம் கூறியுள்ளார். அதோடு கல்லூரிக்கு சென்ற மாணவி மன உளைச்சலுடன் காணப்பட்டத்தால் கல்லூரி ஆசிரியைகள் மாணவியை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது தான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயம் வெளிவந்துள்ளது.

உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்த இளைஞர்களை தேடிவந்தனர். இளைஞர்கள் பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து  அவர்கள் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: தேசம் கடந்த காதல்.. காதலனுக்காக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் இளம்பெண்.. பிரித்து அனுப்பிய போலீசார்..!

பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிப்பட்ட இருவரும் இதுபோல வேறு யாரையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்களா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

First published:

Tags: Kerala, Rape case