முகப்பு /செய்தி /இந்தியா / புதிய விதிமுறைகள் வாட்ஸ் அப்பின் செயல்பாட்டை பாதிக்காது - மத்திய அரசு விளக்கம்

புதிய விதிமுறைகள் வாட்ஸ் அப்பின் செயல்பாட்டை பாதிக்காது - மத்திய அரசு விளக்கம்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

பயனாளர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகள், வாட்ஸ் அப்பின் செயல்பாட்டை பாதிக்காது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் வரைமுறைப்படுத்தும் நோக்கத்தில், கடந்த பிப்ரவரி மாதம் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு, மே 26ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் புதிய தொழில்நுட்ப விதிகளை பின்பற்றும் முடிவில் இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தாலும், இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் பயனாளர்களின் தனிப்பட்ட உரிமையை புதிய விதிகள் பாதிக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்தநிலையில் புதிய விதிகள் வாட்ஸ் அப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது என்றும், பயனாளர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொது ஒழுங்கை உறுதி செய்வதற்கும், தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்கும் இந்த தகவல்கள் அடங்கிய விதிகள் அவசியம் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

First published:

Tags: WhatsApp