நாகலாந்து மாநில முதல்வராக நெய்பியு ரியோ பதவியேற்றுக் கொண்டார். அம்மாநில ஆளுநர் இல.கணேசன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
நாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த பிப்.,27 ல் தேர்தல் நடைபெற்றது. இன்று (மார்ச் 2 ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பா.ஜ.. 12 இடங்களிலும் கூட்டணி கட்சியான என்.டி.பி.பி 25 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆட்சி அமைக்க தேவையான இடத்தை காட்டிலும் அறுதிப்பெரும்பான்மைபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
அதனையடுத்து, என்.டி.பி.பி கட்சியை சேர்ந்த நெய்பியுரியோ 5 வது முறையாக முதல்வராக பதவியேற்பது உறுதியானது.
இன்று நாகலாந்து மாநிலத் தலைநகர் கோஹிமாவில் வைத்து முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மாநில ஆளுநர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்துவைக்க 5-வது முறையாக நெய்பியு ரியோ முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர்களும் பதவியேற்றுகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.