மோடி தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் :அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ₹6000 உதவித்தொகை
மோடி தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் :அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ₹6000 உதவித்தொகை
மத்திய அமைச்சரவை கூட்டம்
சிறு விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் விரிவாக்கமாக அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்ற முடிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் திட்டத்தை விரிவுபடுத்தவும், சிறு வனிகர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் வெள்ளியன்று நடைபெற்றது. இலாகா ஒதுக்கப்பட்ட நிலையில் அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது முதல் தீர்மானமாக, வீரமரணமடைந்த பாதுகாப்பு படையினரின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி உயிர்தியாகம் செய்த வீரர்களின் பனிரெண்டாம் வகுப்பு முடித்த ஆண் வாரிசுகளுக்கான உதவித்தொகை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரத்து 500 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல் பெண் வாரிசுகளுக்கான உதவித்தொகை இரண்டாயிரத்து 250 ரூபாயிலிருந்து மூவாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மாநில போலீஸ் பணியில் இருந்து, நக்ஸலைட்கள் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி தேசிய பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது,
இதேபோல் ஏற்கனவே தேர்தலுக்கு முன் அறிவிக்கப்பட்ட சிறு விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் விரிவாக்கமாக அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்ற முடிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. 5 கோடியே 77 லட்சம் விவசாயிகளுக்கு 2 கட்டங்களாக பணம் கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போது, 5 ஏக்கர் என்ற வரம்பை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 14.5 கோடி விவசாயிகள் பயன்பெறுவர்.
60 வயதை எட்டும் சிறுவணிகர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் அளிக்கும் வகையிலான பென்ஷன் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3 கோடி சிறுவணிகர்கள் பயன்பெறுவர். இந்த திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் வணிகர்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டோராக இருக்கவேண்டும்.
இந்த திட்டத்தை பெற நாடு முழுக்க உள்ள 3 லட்சத்து 25 ஆயிரம் பொது சேவை மையங்களில் பதிவு செய்யலாம். திட்டத்துக்கான பிரீமியத் தொகையில் பாதியை மத்திய அரசு செலுத்தும். மீதத்தை வணிகர்கள் செலுத்த வேண்டும். தகுதியான வணிகர்களின் வங்கிக்கணக்குகளில் பென்ஷன் தொகை வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Watch
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.