2023ஆம் ஆண்டில் உலகில் அதிக மக்கள் தொகை நாடாக இந்தியா முதலிடத்தில் இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது. 2050ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 166 கோடியாகவும் அதேவேளை, சீனாவின் மக்கள் தொகை 131 கோடியாகவும் இருக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலியில், ஐ.நா. அறிக்கையை குறிப்பிட்ட்டுள்ள, மக்கள் தொகை சமத்துவமின்மை ஏற்படக்கூடாது என்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு காரணமாக பூர்வக்குடிகள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால் ஒரு குறிப்பிட்ட சாரரின் மக்கள் தொகை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் பேசி இருந்தார். இதனிடையே இஸ்லாமிய மக்கள் குறித்துதான் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளதாக தகவல் பரவியது.
யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்லாமிய மக்கள்தான் அதிக அளவில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகின்றனர்.
முஸ்லிம்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் இல்லையா? யதார்த்தத்தைப் பார்த்தால், பழங்குடியினரும் திராவிட மக்களும் மட்டுமே பூர்வீகக் குடிகள் . உத்தரபிரதேசத்தில், எந்த சட்டமும் இல்லாமல், விரும்பிய கருவுறுதல் விகிதம் 2026-2030க்குள் அடையப்படும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள்தொகையில் சீனாவை முந்தி முதலிடம் பிடிக்கும் இந்தியா - ஐநா ஆய்வுத் தகவல்
மேலும், ‘ மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கு நாட்டில் எந்தச் சட்டமும் தேவையில்லை என்று அவர்களின் சொந்த சுகாதார அமைச்சர் கூறினார். கருத்தடை மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் முஸ்லிம்கள். 2016ல் 2.6 ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் தற்போது 2.3 ஆக உள்ளது. நாட்டின் மக்கள்தொகை வகுபாடு என்ற உலகின் மற்ற நாடுகளை விட சிறந்தது’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.