நாட்டின் பிரதமராக
மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு அமைக்கப்பட்ட அமைச்சரவையில முக்தர் அப்பாஸ் நக்வி சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்துவந்தார். ஆர்.சி.பி சிங் எஃகுத்துறை அமைச்சராக இருந்துவந்தார். இருவரும் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்தனர். இருவரும் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ள நிலையில், இருவரது பதவிக் காலமும் நாளையுடன் முடிவடைகிறது. இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லையென்பதால் அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமர் மோடி, முக்தர் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி சிங் இருவரையும் பாராட்டியுள்ளார் என்றும் அதுவே இது அவர்களது கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்பதையும் உணர்த்தியது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆகஸ்ட் மாதம் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பா.ஜ.க சார்பில் முக்தர் அப்பாஸ் நக்வியை நிறுத்துவதற்காக அவரை அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லியுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.