உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து தனது மகளை கொலை செய்து அதை தற்கொலை என நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷில் வர்மா. இவருக்கு ஸ்மிருதி ராணி வர்மா என்ற மனைவியும், குஷ்பு வர்மா என்ற 16 வயது மகளும் உள்ளனர்.
தாய் ஸ்மிருதி ராணிக்கும் தந்தை சுஷிலுக்கும் சில ஆண்டுகளாகவே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்மிருதி ராணி கணவரை பிரிந்து மகள் குஷ்பு வர்மாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது, ஸ்மிருதி ராணிக்கு அனில் குமார் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இது காதல் உறவாக மாறியுள்ளது. இருவரின் பழக்கமும் மகள் குஷ்புவுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி ஸ்மிருதி வர்மாவின் வீட்டில் அவரது மகள் குஷ்பு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். தனது மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று தாய் ஸ்மிருதி நாடகமாடிய நிலையில் தந்தை சுஷிலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸ்மிருதி மீதும் அவரது காதலன் அனில் குமார் மீதும் தந்தை சுஷில் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: லின் உறவுகளுக்கும் குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம் பொருந்தும் - மத்திய சட்ட அமைச்சர் தகவல்
அதன் பேரில் காவல்துறை நடத்திய விசாரணையில், தாங்கள் இருவரும் தான் குஷ்புவை கொலை செய்தோம் என ஸ்மிருதியும், அனிலும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய காவல்துறையினர், மொராதாபாத் சிறையில் அவர்களை அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Extramarital affair, Girl Murder, Murder, Uttar pradesh