தலைநகர் டெல்லியில் இன்று மத்தியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.4 புள்ளியாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக நில அதிர்வுகள் உத்தரகாண்ட், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தை தேசிய மையம் (NCS) உறுதிபடுத்தியுள்ளது. அதன்படி, இன்று பிப்ரவரி 22ஆம் தேதி நண்பகல் 1.30 மணியளவில் உத்தரகாண்டின் பித்தோகர் பகுதிக்கு கிழக்கே 143 70 கிமீ தூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது.
Earthquake of Magnitude:4.4, Occurred on 22-02-2023, 13:30:23 IST, Lat:29.56 & Long:81.70, Depth: 10 Km ,Location: 143km E of Pithoragarh, Uttarakhand, India for more information Download the BhooKamp App https://t.co/MNTAXJS0EJ@Dr_Mishra1966 @Ravi_MoES @ndmaindia @Indiametdept pic.twitter.com/ovDBNhb7VO
— National Center for Seismology (@NCS_Earthquake) February 22, 2023
நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது, அட்சரேகை 29.56 மற்றும் தீர்க்கரேகை: 81.70, என்று குறிப்பிட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே வட மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Earthquake, Uttarkhand