தென்கிழக்கு வங்க கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கை சென்னைக்கு தென் கிழக்கே 1080 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த மண்டலமானது இந்த காற்றழுத்த மண்டலமானது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதன் பின்னர் இன்று புயலாக மாறும் என்றும், நாளை தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் கன முதல் அதி கனமழை வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக புயல் உருவாகும் சூழல் இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
Also see... வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக மாறு வாய்ப்பு
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.