மாட்டை விட மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்று ராஜஸ்தான் மாநில துணைமுதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் பசு இறைச்சி வைத்திருந்ததாக மூவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாக, மாட்டிறைச்சி வைத்திருந்த விவகாரத்துக்கு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தியது இதுதான் முதல்முறை.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெங்களூருவில், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், ’மாட்டைவிட மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். பசுக்கள் வதை மற்றும் பசு கடத்தல் விவகாரங்களில் வேறுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
என்னுடைய சொந்தக் கருத்து என்னவென்றால் பெண்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், சக மனிதன் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதற்கும், கண்ணியமற்ற முறையில் சக மனிதனை தாக்கும் செயல்களுக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும்.
புனிதமான விலங்குகளைக் காப்பாற்றுவது நல்லது. எனக்கு அதில் நம்பிக்கை உண்டு. ஆனால், மாடா? மனிதனா? என்று வரும்போது மனிதனுக்குத்தான் முக்கியம் தரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sachin pilot