பெங்களூருவைச் சேர்ந்த ஜேனெட் யக்னேஸ்வரன் என்ற பெண் தனது கணவரின் மறைவுக்குப் பின்னர் அவரது நினைவாக பெங்களூருவில் இதுவரையில் 73 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தும் வருகிறார்.
ஜேனெட்டின் கணவர் கடந்த 2005-ம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். அதன் பிறகு அவரது நினைவாக 2006-ம் ஆண்டு பெங்களூருவைச் சுற்றி மரங்கள் நடத்தொடங்கினார். இதுவரையில் 73 மரங்களை நட்டு வளர்த்துள்ளார். ஜேனெட் செய்த பணி, பெங்களூரு நகரிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே அப்பகுதியினர் கூறுகின்றனர்.
மரம் நட்டு வளர்க்க நினைப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். அடுத்ததாக கர்நாடகாவின் வேறு சில பகுதிகளிலும், கூர் பகுதியில் 1,000 மரக்கன்றுகள், தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகள் நட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க: தென்னை மரம் ஏற ’பைக்’ கண்டுபிடித்த விவசாயி- கொண்டாடும் நெட்டிசன்கள்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangaluru, Tree plantation