கொல்கத்தாவைச் சேர்ந்த 45 வயது அமித் அகர்வால், தனது மனைவி ஷில்பியுடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்தார். குடும்பத் தகராறில் ஷில்பியைக் கொன்ற அமித், விமானத்தில் கொல்கத்தா சென்று, மாமியார் லலிதா தன்தானியாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அத்துடன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து மேற்குவங்கம் மற்றும் கர்நாடக போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை கடிதத்தில் மனைவியைக் கொன்றுவிட்டதாக அமித் எழுதியதை, போலீசார் பார்த்த பிறகே பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் ஷில்பி இறந்தது தெரியவந்தது.
Also see:
அமித்தின் 10 வயது மகன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.