லிவ் இன் உறவில் இருந்த தனது காதலியை கொலை செய்துவிட்டு அதை தற்கொலை மரணம் போல ஏமாற்றிய காதலனை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிங்கசந்திராவில் வசித்து வருபவர் பிரசாந்த். 25 வயதான பிரசாந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சுனிதா வேலை நிமித்தமாக பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். அப்போது பிரசாந்த்துடன் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. சுனிதா பிரசாந்தை விட 3 வயது மூத்தவர். இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்ளாமல் லிவ் இன் முறையில் வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சுனிதா பிரசாந்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரசாந்திற்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை.
தனது சகோதரிக்கு திருமணம் செய்து வைத்தப் பின்னர் சுனிதாவை திருமணம் செய்து கொள்வதாக பிரசாந்த் வாக்கு தந்து வந்துள்ளார். இந்நிலையில், பிரசாந்தின் சகோதரிக்கும் சமீபத்தில் திருணம் முடிந்துள்ளது. எனவே, உடனடியாக தன்னை மணம் முடிக்க வேண்டும் என சுனிதா பிரசாந்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் சுனிதாவை கடுமையாக தாக்கிய பிரசாந்த், அவரின் கழுத்தை காலால் நெறித்து கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: 5ஆம் வகுப்பு மாணவியை முதல் மாடியில் இருந்து வீசிய எரிந்த ஆசிரியை.. டெல்லியில் பகீர் சம்பவம்
பின்னர், சுனிதாவை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்துகொண்டது போல செட் அப் செய்து மருத்துவமனைக்கு தகவல் தந்துள்ளார். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்த நிலையில், மருத்துவமனை பிரேத பரிசோதனையில் பிரசாந்தின் நாடகம் அம்பலமாகியுள்ளது. மருத்துவர்கள் காவல்துறையினரை உஷார் செய்த நிலையில், அவர்கள் பிரசாந்தை கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது தனது கொலை குற்றத்தை பிரசாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து பெங்களூரு காவல்துறையினர் பிரசாந்தை நீதிமன்ற காவலில் எடுத்து சிறையில் அடைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bengaluru, Karnataka, Love issue, Murder