மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல்
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க மிகப்பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தற்போது மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 75-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
வலுவான எதிர்கட்சியாக உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிர அரசியலை செய்துவருகிறது. அதனால், அவ்வப்போது பா.ஜ.கவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வன்முறைச் சம்பவங்களும் ஏற்படுகின்றன. அதைத் தவிர மேற்கு வங்க ஆளுநர், மம்தா பானர்ஜியுடன் மோதல் போக்கை கடைபிடித்துவருகிறது.
இந்தநிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பா.ஜ.க அல்லாத முதல்வர்கள், எதிர்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘நமது நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீது பா.ஜ.க பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. பா.ஜ.க அரசு தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து, அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் உள்ளிட்ட மத்திய அமைப்புகளைத் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறது.
இந்த அடக்குமுறை ஆட்சிக்கு எதிர்த்து முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து போரட வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் முன்னோக்கி செல்லும் வழியை பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொருவரின் வசதிக்கும் பொருத்தத்திற்கும் ஏற்ப ஓர் இடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டத்திற்கு வர வேண்டும். நாட்டில் தேர்தல் நெருங்கும் சமயம் எல்லாம் அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் கமிஷன், வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.கவின் நோக்கத்தை நாம் எதிர்க்க வேண்டும். பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மத்திய அமைப்பின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடுகின்றன.
ஹிஜாப் விவகாரம் : கர்நாடகா SSLC தேர்வை 21,000 பேர் புறக்கணித்ததாக தகவல்...
நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தற்போது சில பக்க சார்பான அரசியல் தலையீடுகளால் மக்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும். நீதித்துறை, ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியவை நமது ஜனநாயகத்தின் முக்கியமானத் தூண்களாகும். இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால், மொத்த அமைப்பும் குலைந்து போகும். அரசாங்கம் சரியாக செயல்படுவதை உறுதி செய்வதும், எதிப்புக் குரல்கள் நசுக்கப்படுவதை எதிர்ப்பதும் எதிர்கட்சிகளுக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள பொறுப்புகளாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.