பிரிவினை அரசியலில் ஈடுபடுபவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் - மம்தா பானர்ஜி
- News18 Tamil
- Last Updated: February 11, 2020, 2:31 PM IST
வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்களையும், பிரிவினை அரசியலில் ஈடுபடுபவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 21 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 59 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் ஆம் ஆத்மி, மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியமைக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் மம்தா பானர்ஜி, ”டெல்லியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெற்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துக்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்களையும், பிரிவினை அரசியலில் ஈடுபடுபவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.Also See...
இம்மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 21 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 59 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் ஆம் ஆத்மி, மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியமைக்கிறது.
Congratulations @ArvindKejriwal as #DelhiResults show @AamAadmiParty all set to win #DelhiElection2020 with a thumping majority yet again. Leaders playing on faith through hate speech & divisive politics should take a cue, as only those who deliver on their promises are rewarded.
— Mamata Banerjee (@MamataOfficial) February 11, 2020
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் மம்தா பானர்ஜி, ”டெல்லியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெற்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துக்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்களையும், பிரிவினை அரசியலில் ஈடுபடுபவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.Also See...