அக்னிபத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற திறமையான இளைஞர்களுக்கு மஹிந்திரா குழுமத்தில் வேலை உறுதி என அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ஒழுக்கம் மற்றும் திறன் பயிற்சி பெறும் வீரர்கள் வேலைவாய்ப்பிற்கு ஏற்றவர்களாக மாறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தலைமைப் பண்பு, குழுப்பணி மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றுடன், அக்னிவீரர்கள் தொழில்துறையில் சந்தைக்கு ஏற்ற தீர்வுகளை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Large potential for employment of Agniveers in the Corporate Sector. With leadership, teamwork & physical training, agniveers provide market-ready professional solutions to industry, covering the full spectrum from operations to administration & supply chain management https://t.co/iE5DtMAQvY
— anand mahindra (@anandmahindra) June 20, 2022
முன்னதாக விமான போக்குவரத்துத் துறையில் அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.
மேலும் அக்னிபத் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை, அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் 10% ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதேபோல பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள 10% பணியிடங்கள் அக்னிபாத் வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Mahindra Group chairman #AnandMahindra said he will recruit #Agniveers. The business leader tweeted, "Saddened by the violence around the #Agnipath program...The Mahindra Group welcomes the opportunity to recruit such trained, capable young people."#AgnipathScheme pic.twitter.com/hfpmRdaZLm
— News18.com (@news18dotcom) June 20, 2022
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் நாட்டின் சில பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களை கொளுத்துவது, ரயில்களை கொளுத்துவது என வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேசம் மாநிலம் ஜூன்பூர் பகுதியில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அரசு பேருந்து, பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
This person know nothing about Agnipath scheme but he is blocking road as a protest against Agnipath scheme. pic.twitter.com/PrVArFcBnM
— Anshul Saxena (@AskAnshul) June 19, 2022
மேலும் வாட்ஸ் ஆப் செயலியில் அக்னி பாதை குறித்து தவறாக வதந்தி பரப்பி வன்முறையை தூண்டிய 35 வாட்ஸ் ஆப் குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
And what will you tell about govts inaction against them... Despite knowing they are endangering so many people's lives ? https://t.co/OrfGWXXk1H
— 🇷ohit Sakaria🐛🐮 (@RohitJain700) June 20, 2022
வன்முறையில் ஈடுபட்டவர்கள் ரயில் நிலையத்தில் கடைகளை உடைத்து அங்கிருந்த உணவு பொருட்களை திருடிச் செல்லும் வீடியோக்களும் , கொழுந்து விட்டு எறியும் ரயில்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#Viral | Shocking Video Of Mob Looting A Shop At A Railway Station in Bihar Amidst The Ongoing Agnipath Protests.#Agnipath #Agniveers #AgnipathScheme #AgnipathProtests #Protests #Trending #Viral #Shorts #Reels pic.twitter.com/wDaSEwL4OF
— News18.com (@news18dotcom) June 19, 2022
நாட்டின் பொதுச்சொத்தை இவ்விதம் எரிப்பது நியாயமா என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த காங்கிரஸ்கட்சி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agnipath, Anand Mahindra