ஒடிசா, பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிர அரசும் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
2021 சென்சஸில் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்க்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தீர்மானத்தை ஏற்காவிட்டால் மாநிலமே சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என சரத் பவாரின் மஹா விகாஸ் அகாதி கட்சி அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், துணை முதல்வர் அஜித் பவார் கூறியதாவது, முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தலைமையில் ஒரு குழு பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் எனக் கூறியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகையை அறிந்து, அதற்கேற்ப கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்வதற்காக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சிகளும் இப்படியான தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.