இந்தியாவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லய்யாவின் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றவர் விஜய் மல்லய்யா. இதையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. இதனை எதிர்த்து 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் உயர்நீதிமன்றத்தில் மல்லய்யா மனு தாக்கல் செய்தார். கடந்த 16 மாதங்களாக விசாரித்து வந்த லண்டன் உயர்நீதிமன்றம், விஜய் மல்லய்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay Mallya