பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை கொலை செய்பவருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற சுவரொட்டி அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பஞ்சாபின் மொகாலி நகரின் வழிகாட்டி பலகையில், நேற்று ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது.அதில், 'முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்கை கொலை செய்யும் நபருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.
இந்த சுவரொட்டி, ஒரு கணினி மையத்தில் அச்சிடப்பட்டிருந்தது என்பதுடன், அதில் ஒரு, 'இ - மெயில்' முகவரியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. சுவரொட்டியை கைப்பற்றிய போலீசார், முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வழக்குப்பதிவு செய்ததுடன், விசாரணையை, 'சைபர் கிரைம்' பிரிவிற்கு மாற்றியுள்ளனர்.
முதல்வர் அமரீந்தர் சிங் மிரட்டப்படுவது இது முதல் முறை அல்ல. சமூக விரோதிகள் டிசம்பர் 14ம் தேதியன்று மொகாலியில் முதல்வர் அமரீந்தர் போஸ்டரில் அவரது முகத்தில் கருப்புச் சாயம் பூசியதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கொலை மிரட்டல், இந்த 2 சம்பவங்களின் பின்னணியிலும் காலிஸ்தான் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான சீக் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு ஏற்கெனவே முதல்வருக்கு கொலை மிரட்டல்கள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.