வரதட்சனை கொடுமை காரணமாக திருவணந்தபுரத்தை சேர்ந்த இளம்பெண் தீவைத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவணந்தபுரம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் அர்ச்சனா தனது கணவர் சுரேஷூடன் வசித்து வந்த வீட்டில் உடல்கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது மகள் தற்கொலை செய்துக்கொள்ள வாய்ப்பே இல்லை இது திட்டமிட்ட கொலை என குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அர்ச்சனா -சுரேஷ் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள்.
திருமணமான மூன்று மாதத்தில் சுரேஷின் தந்தை 3 லட்ச ரூபாய் வரதட்சனையாக அர்ச்சனாவின் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர். சுரேஷின் சகோதரருக்கு இடம் வாங்கித்தருவதற்காக இந்தப்பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அர்ச்சனாவின் தந்தையோ தன்னிடம் இவ்வளவு பணம் இல்லை எனக் கூறிவிட்டார். இத்துடன் இந்த விவகாரத்தை அர்ச்சனாவின் குடும்பத்தினரிடம் சுரேஷ் வீட்டினர் கொண்டு செல்லவில்லை.
சுரேஷ் இல்லத்தில் இந்த சம்பவம் தொடர்பாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தின் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் மற்றும் அர்ச்சனா தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். சுரேஷ்-க்கு குடிப்பழக்கம் இருந்தத்தால் வீட்டில் கணவன் மனைவி இடையே பிரச்னை இருந்துள்ளது. திங்கள்கிழமை காலையில் அர்ச்சனா கணவர் வீட்டுக்கு சென்ற நிலையில் அதன்பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அர்ச்சனாவின் குடும்பத்தினர் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை வழக்கு எதும் பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து பேசிய அர்ச்சனாவின் தந்தை, “ நான் என் மகளை சந்திக்கும்போது எல்லாம் அவர் கண்ணீர் விட்டு கதறுவார். குடித்து விட்டு என் மகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். அவளை தனியாக விட்டு சென்றுள்ளார். இதையெல்லாம் என் மகள் என்னிடம் கூறாமல் மறைத்துவிட்டார்.
என் பொன்னு பிஎஸ்சி நர்சிங் முடித்துள்ளார். அவரை வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்திருந்தனர். சுரேஷ் கையில் காலையில் டீசல் கேன் இருப்பதை பார்த்தேன் எதுக்கு டீசல் எனக் கேட்டதற்கு வீட்டில் எறும்பு அதிகமாக இருக்கிறது அதனை கொல்வதற்கு எனக் கூறினார். இப்போது என் மகள் இறந்துவிட்டார். என் மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவளை கொன்றுவிட்டனர்” எனக் கூறி உடைந்து அழுதார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.