கேரளாவில் இளம்பெண் ஒருவர் திருமணமான இரண்டு வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் திருவணந்தபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான இரண்டு வாரங்களில் 50 சவரன் நகை மற்றும் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். அதன்பின்னர் அந்தப்பெண் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் எண்ணை தொடர்புக்கொண்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இளம்பெண்ணின் தந்தை இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் மேற்கொண்டனர். அந்தப்பெண் எஸ்.பி.ஐ வங்கியில் கலெக்ஷன் ஆபிசராக பணியாற்றி வருவது தெரியவந்தது. விசாரணையில் அந்தப்பெண் காதலனுடன் ஓடிப்போனது தெரியவந்தது.
இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் காதலனுடன் இருந்த பெண்ணை காவல்நிலையம் அழைத்து வந்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்தப்பெண் போலீஸாரிடம் தனது குடும்பத்தினருடன், கணவருடனும் செல்வதற்கு விரும்பவில்லை. நான் காதலனுடன் செல்லவே விரும்புவதாக கூறியுள்ளார்.
இளம்பெண்ணின் காதலன் திருமணத்துக்கு முன்பே வந்து பெண் கேட்டதாகவும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. சொத்துக்காக காத்திருந்து இருவரும் ஓடிப்போயுள்ளனர் என பெண்ணின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனையடுத்து அந்தப்பெண் சில நகைகளை தனது குடும்பத்தினரிடம் திருப்பி அளித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.