கேரளா மாநிலம் சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகதளம். கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்தும் அங்கு பக்தர்கள் செல்வார்கள். குறிப்பாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் கேரள சபரிமலையில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில்தான் கேரளா மாநிலம் சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
சபரிமலையின் எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவெலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செருவேலி எஸ்டேட்டில் உள்ள நிலம் உட்பட 2570 ஏக்கரில் விமான நிலையம் அமைகிறது. 3ஆயிரத்து500 மீட்டர் நீள ஓடுபாதையுடன் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி விமான நிலையம் அமைக்க மெகா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாநில பட்ஜெட்டில், விமான நிலைய திட்டத்துக்கு, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு மத்திய நாடாளுமன்றக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சபரிமலை புனித யாத்திரை சுற்றுலாவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் 39 விநாடிகள் மட்டுமே மின் தடை ஏற்படும் வகையில் சிறப்பாக செயல்பட்டதாக மின்சார வாரியத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தில் தடையின்றி மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும்,
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் தடையின்றி மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவது சவாலானதாகவே இருந்தது. 3 ஆண்டுகளுக்கு முன்புவரை, பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு மின் கம்பம் அமைக்கப்பட்டு, மின் கம்பி வழியாக மின்சாரம் கொண்டுசெல்லப்பட்டது. இதனால், வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு வந்தன.
இதனைத் தொடர்ந்து, இன்சுலேட்டட் ஹை டென்ஷன் மற்றும் லோ டென்ஷன் பாதைகள் அமைக்கப்பட்டன. இதன்மூலம், மின்சாரம் தாக்கி வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. மேலும், தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி, பழுதுகளை கேரள மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவ்வப்போது சரிசெய்து வருகின்றனர். இதன்மூலம், மண்டல பூஜை காலமான 41 நாட்களில் 39 விநாடிகள் மட்டுமே மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. இதற்காக மின்சார வாரியத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sabarimala