முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாதுகாப்பான அளவில் தண்ணீரை, தமிழக அரசு திறந்துவிட அறிவுறுத்தும்படி முல்லைப்பெரியாறு மேற்பார்வைக்குழுவுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர் ஜாய் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 30ம் தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை தமிழக அதிகாரிகள் அதிகாலை 4 மணிக்கு திறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
கடந்த 30ம் தேதியே 9 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஜாய் தெரிவித்துள்ளார். தமிழக அரசு திறந்துவிட்ட தண்ணீரால் வண்டிப்பெரியாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் உள்ளதாகவும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் ஜாய் குறிப்பிட்டுள்ளார்.
Also Read : டெல்லியில் தாய், மகள் மீது கொடூர தாக்குதல் - பகீர் காட்சிகள்
விநாடிக்கு 5 700 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ஜாய் குற்றம்சாட்டியுள்ளார். முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க போதுமான அளவு தண்ணீரை முறையாக வெளியேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜாய் கோரியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.