பாஜகவினர் போலி இந்துக்கள் என்றும் தாங்கள் தான் உண்மையான இந்துக்கள் என்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
ராம ஜன்மபூமி யாருக்கு சொந்தம் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அதில், அரசியல் கட்சிகளின் தலையீடு தேவையில்லை. பாஜக சொல்லித்தான் நாங்கள் கோயிலுக்கு செல்கிறோமா என்ன?
இந்துத்துவாவை வைத்து அரசியல் செய்யும் பாஜகவினர் உண்மையில் இந்துக்கள் இல்லை. அவர்கள் போலி இந்துக்கள். நாங்கள் தான் உண்மையான இந்துக்கள். இந்து மதம் அனைவரையும் மதிக்கக் சொல்கிறது. ஆனால், பாஜகவினர் அதை செய்வதில்லை என சந்திரசேகர் ராவ் குற்றஞ்சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கடந்த 73 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் செய்தும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தவில்லை. காங்கிரஸ் 65 ஆண்டுகளும் பாஜக 11 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளன. காங்கிரஸ் சரியான ஆட்சி நடத்தி இருந்தால், இந்தியாவின் வளர்ச்சி சீனா மற்றும் சிங்கப்பூரை போல உயர்ந்திருக்கும் என்றார்.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சித் திட்டங்களுக்கு நேரு, ராஜிவ் காந்தி, இந்திரா காந்தியின் பெயர்களை வைப்பார்கள். பாஜக வெற்றி பெற்றால், தீன்தயாள் உபாத்யாயா, ஷியாம் பிரகாஷ் முகர்ஜியின் பெயர்களை திட்டங்களுக்கு வைப்பார்கள். பெயர்கள் தான் மாறுமே தவிர, மக்களுக்கான பயன் என்றுமே சென்று சேராது.
இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக உள்ள கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், மட்டுமே தேசம் வளர்ச்சி பெறும் என்றார்.
Also See...
Published by:Mari S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.