குஜராத் மாநிலத்தின் முக்கிய பதவிகளை தமிழர்கள் அலங்கரித்து வருகின்றனர்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வரும் மாநிலமாக குஜராத் திகழ்ந்து வருகிறது. அந்த மாநிலத்தின் முதன்மை செயலாளராக கேரளாவைச் சேர்ந்த கைலாசநாதன் உள்ளார். இவர் பிறந்தது கேரளாவாக இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் கல்வி பயின்றுள்ளார். 13 ஆண்டுகளாக அவருக்கு பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோதும் கைலாசநாதன் முதன்மை செயலாளராகவும் பதவியில் இருந்ததுடன் முக்கிய முடிவுகளையும் அவர் எடுத்து வருகிறார். இதேபோல் அகமதாபாத் மாநகராட்சியின் ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரியான தென்னரசன் இருந்து வருகிறார்.
சபர்மதி ஆற்றை 1,500 கோடியில் தூய்மை செய்து தற்போது முக்கிய சுற்றுலா தளமாக மாற்றிக்காண்பித்துள்ளார் தென்னரசன். இதே போல பிரதமர் மோடியின் சொந்த ஊரான மகேசன மாவட்டம் வாட் நகரில் மாவட்ட ஆட்சியராக நாகராஜ் ஐ.ஏ.எஸ் உள்ளார். இதேபோல் வருவாய் துறை செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சொரூப். சிறு,குறு மேம்பாட்டு துறை செயலாளராக ரஞ்சித் ஐ.ஏ.எஸ் ஆகியோர் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government officers, Gujarat, Tamils