பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின்னர் மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2-வது முறையாக பதவியேற்று 8 மாதங்களைக் கடந்துள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிக்ஸ் வங்கி தலைவரும், முன்னாள் நிதி ஆயோக் தலைமை நிர்வாகியுமான கே.வி. காமத், மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வப்பன் தாஸ்குப்தா ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், நிதித்துறை இணையமைச்சராக ஆவார் என எதிர்பார்க்கப்படும் கே.வி காமத், ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளதுடன், நிதித்துறையில் அனுபவம் வாய்ந்தவர். இவர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஸ்வப்பன் தாஸ்குப்தாவிற்கு மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi Cabinet