முகப்பு /செய்தி /இந்தியா / 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆறு சிறார்கள் கைது

11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆறு சிறார்கள் கைது

பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராட்டம்

பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராட்டம்

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 10 முதல் 16 வயதுக்குட்பட்ட ஆறு சிறார்கள் 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய புகாரில் ஆறு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் உள்ள தப்காரா பகுதியில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை கூறியதாவது, ஏப்ரல் 19ஆம் தேதி இப்பகுதியில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பாதிக்கப்பட்ட சிறுமி கலந்து கொண்டுள்ளார். திருமண வரவேற்பு விழா முடிந்ததும் சிறுமி வீடு திரும்பி கொண்டிருக்கையில், ஆறு பேர் அச்சிறுமியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

சிறுமியுடன் வந்த இரு தோழிகள் இந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், சம்பவயிடத்திற்கு அவர்கள் விரைந்துள்ளனர். இதை அறிந்ததும் அந்த ஆறு சிறார்களும் தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் காவல்துறையிடம் புகார் தெரிவிக்க பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் தயங்கியுள்ளனர். சமூகத்தில் மதிப்பு குறைந்துவிடும் என பயந்து பஞ்சாயத்து மூலம் பிரச்னையை தீர்த்துவிடலாம் என அவர்கள் தயங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் ஒரு வழியாக அவர்கள் கடந்த வியாழக்கிழமை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறை பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது தோழிகள், பெற்றோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட நிலையில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஆறு பேரும் 10 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஆறு பேரையும் நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்திய நிலையில், இவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று வயது சிறுமி - ராஜஸ்தானில் கொடூரம்

இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தின் லோகர்தாகோ மாவட்டத்தில், 37 வயது நபர் மூன்றரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரில்," குற்றஞ்சாட்டப்பட்ட நபர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தந்து தனது வீட்டு அழைத்துச் சென்று குற்றச் செயலில் ஈடுபட்டதாக" கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Crime News, Minor girl, Rape case