நடப்பு 2022-23ஆம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் சரக்கு போக்குவரத்து மூலம் இந்திய ரயில்வே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட அதிக வருவாய் ஈட்டியுள்ளது. இது தொடர்பான விரிவான புள்ளி விவரங்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் முதல் நவம்பர் 2022 வரை 978.72 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட இது 8 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 903.16 மெட்ரிக் டன் அளவிற்கு சரக்குகளை கையாண்டது. இதன் மூலம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தி்ல் ரூ.91,127 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், நடப்பாண்டில் 16 சதவீதம் அதிகமாக ரூ.1,05,905 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 116.96 மெட்ரிக் டன் அளவிற்கு சரக்குகளை கையாண்ட இந்திய ரயில்வே 2022 நவம்பர் மாதத்தில் 123.9 கோடி மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதன் மூலம் 2022 நவம்பர் மாதத்தில் ரயில்வேவுக்கு ரூ.13,560 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
சரக்கு போக்குவரத்தில் மற்றவர்களை விட சிறப்பான சேவையும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற வேண்டும் என்ற நோக்கில் ரயில்வே தீவிரமாக செயல்பட்டுவருவதாகவும் அதன் பலனை முதல் 8 மாதத்திலேயே ரயில்வே கண்டுள்ளதாக கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways