கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீன்பிடித்து கொண்டிருந்த 100க்கும் மேற்ப்பட்ட மீனவர்களின் விசைப்படகில் இருந்த மீன்பிடிவலைகளை அறுத்தெரிந்தும் சுரேஷ் என்ற மீனவரின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளனர். அத்துடன் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்துள்ளனர்.
இதில் இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் மண்டை உடைந்தது. அதனால் மீனவர்கள் அனைவரும் மீன் பிடிக்காமல் கரைதிரும்பினர். இதனால் அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இப்படி தாக்குதல் நடத்துவதும் விரட்டியடிப்பதும் அவர்களை கைது செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.