முகப்பு /செய்தி /இந்தியா / ‌இந்திய‌ ‌எல்லைக்குள் நுழைந்த‌ ‌சீன‌ ‌ராணுவ‌ வீரர் கைது

‌இந்திய‌ ‌எல்லைக்குள் நுழைந்த‌ ‌சீன‌ ‌ராணுவ‌ வீரர் கைது

கோப்புப்படம்

கோப்புப்படம்

‌பாங்க்சாங்‌ ‌சோ‌ ‌ஏரியில்‌ ‌இருந்து‌ ‌300‌ ‌கிலோமீட்டர்‌ ‌தூரத்தில்‌ ‌சீன‌ ‌வீரர்‌ ‌வாங்க்‌ ‌யா‌ ‌லாங்‌ ‌என்ற‌ ‌வீரர்‌ ‌இந்திய‌ ‌எல்லைக்குள்‌ ‌நுழைந்தார்.‌

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

லடாக்கில்‌ ‌உள்ள‌ ‌சும்மார்-தெம்சோக்‌ ‌இடையே‌ ‌இந்திய‌ ‌பகுதிக்குள்‌ ‌நுழைந்த‌ ‌சீன‌ ‌ராணுவ‌ ‌வீரரை‌ ‌இந்திய‌ ‌ராணுவத்தினர்‌ ‌கைது‌ ‌செய்தனர்.‌ ‌

கடந்த‌ ‌மே‌ ‌மாதம்‌ ‌முதல்‌ ‌இந்தியா-சீனா‌ ‌இடையே‌ ‌லடாக்கில்‌ ‌எல்லை‌ ‌பிரச்னை‌ ‌நிலவி‌ ‌வருகிறது.‌ ‌ஜூன்‌ ‌மாதம்‌ ‌பாங்க்சாங்‌ ‌சோ‌ ‌ஏரி‌ ‌அருகே‌ ‌இரு‌ ‌நாட்டு‌ ‌வீரர்கள்‌ ‌மோதிக்கொண்டதில்‌ ‌20‌ ‌இந்திய‌ ‌வீரர்கள்‌ ‌உயிரிழந்தனர்.‌ ‌

இந்த‌ ‌நிலையில்‌ ‌பாங்க்சாங்‌ ‌சோ‌ ‌ஏரியில்‌ ‌இருந்து‌ ‌300‌ ‌கிலோமீட்டர்‌ ‌தூரத்தில்‌ ‌சீன‌ ‌வீரர்‌ ‌வாங்க்‌ ‌யா‌ ‌லாங்‌ ‌என்ற‌ ‌வீரர்‌ ‌இந்திய‌ ‌எல்லைக்குள்‌ ‌நுழைந்தார்.‌ ‌அவரை‌ ‌பிடித்த‌ ‌ராணுவ‌ ‌வீரர்கள்‌ ‌விசாரணை‌ ‌நடத்தி‌ வருகின்றனர்.‌ ‌பிடிபட்ட‌ ‌ராணுவ‌ ‌வீரரை‌ ‌சீனாவிடம்‌ ‌உரிய‌ ‌விதிகளின்படி‌ ‌ஒப்படைக்க‌ ‌இந்திய‌ ‌ராணுவம்‌ ‌திட்டமிட்டுள்ளது.‌ பிடிபட்ட‌ ‌வீரருக்கு‌ ‌மருத்துவ‌ ‌உதவி,‌ ‌உணவு‌ ‌மற்றும்‌ ‌கதகதப்பான‌ ‌உடையையும்‌ ‌இந்திய‌ ‌உடையையும் இந்திய ராணுவம் வழங்கியுள்ளது.

First published:

Tags: Ladakh