கடலுக்குள் இருந்து எதிரிகளின் கப்பல்களை தாக்கும் திறன் கொண்ட நவீன நீர்மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் இன்று இணைக்கப்பட்டது.
காந்தேரி நீர்மூழ்கி கப்பலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடற்படையிடம் இன்று ஒப்படைத்தார். இது இந்திய கடற்படையில் இடம்பெறும் 2வது ஸ்கார்பியன் வகை நீர் மூழ்கி கப்பலாகும். 2005 ஆம் ஆண்டு பிரான்சுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, அந்நாட்டு தொழிநுட்பத்துடன் 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைக்க முடிவெடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஐஎன்எக்ஸ் கல்வாரி என்ற முதல் கப்பலை பிரதமர் மோடி, 2017-ம் ஆண்டு கடற்படையிடம் ஒப்படைத்தார். -அடுத்த ஆண்டுக்குள் அனைத்து கப்பல்களும் கட்டப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 25ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். காந்தேரி கப்பலில் நீருக்குள் செலுத்தும் ஏவுகணைகளும், நீருக்குள் இருந்தபடியே நீருக்கு வெளியே உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளும் இடம்பெறும். இதன்மூலம் எதிரிகளின் கப்பல்கள் மீது எளிதாக தாக்குதல் நடத்த முடியும்.
இதனிடையே, கேரள மாநிலம், கொல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத அதுபோல அண்டை நாடுகள் தாக்குதல் நடத்த முயன்றால், அதனை தடுக்க நமது கடற்படை தயார் நிலையில் உள்ளது என்பதற்கு தான் உறுதியளிப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
Also See..
Published by:Sankar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.