முகப்பு /செய்தி /இந்தியா / Cow Hug Day அறிவிப்பை திரும்ப பெற்றது இந்திய விலங்குகள் நலவாரியம்!

Cow Hug Day அறிவிப்பை திரும்ப பெற்றது இந்திய விலங்குகள் நலவாரியம்!

மாடு கட்டிபிடி தின அறிவிப்பை திரும்ப பெற்றது விலங்குகள் நலவாரியம்

மாடு கட்டிபிடி தின அறிவிப்பை திரும்ப பெற்றது விலங்குகள் நலவாரியம்

பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட விலங்குகள் நல வாரியம் அறிவித்திருந்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

பிப்ரவரி 14ஆம் தேதியை பசுமாடுகளை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.

Cow hug day குறித்து விலங்குகள் நலவாரியம் வெளியிட்ட அறிக்கையில், “பசுக்களை காமதேனு எனவும் கோமாதா என அழைப்பதற்கு காரணம் மனித சமூகத்திற்கு பசு தாய் போல் செயல்படுகிறது. மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருகிறது. நம் கலாச்சாரமும் பண்பாடும் மறக்கக்கடிக்கப்பட்டது.

பசுக்களில் பல பலன்கள் தருவதால், பசுவை கட்டிப்பிடிப்பது மனரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனிநபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே பசு மீது நேசம் கொண்டவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள். நம் தாய் பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் நல்ல சக்தி பரப்பும் வகையில் இந்நாளை கொண்டாடுவோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்களை பெற்றது. இதனைதொடர்ந்து இந்த அறிவிப்பை இந்திய விலங்குகள் நலவாரியம் திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் இதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Animals, Cow, Hug Day